Tuesday, February 12, 2008

'சற்று முன் கிடைத்த தகவல்'

ஏர் மீடியா டெக்னாலஜி நிறுவனம் சார்பில் தக்காளி சீனிவாசன் இயக்கும் படம் 'சற்று முன் கிடைத்த தகவல்'.இதுவரை அடிதடி காட்சிகளில் பொறிபறக்க வைத்த சண்டை பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாகிறார். இவருக்கு ஜோடியாக 'அம்முவாகிய நான்' பாரதி மற்றும் ஸ்ரீமன், கெளசல்யா, சேது, கருணாஸ், கிரேன் மனோகர் உளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒரு மனநல காப்பகத்தில் இருந்து தப்பும் கனல் கண்ணன், பாரதி தனியாக இருக்கும் வீட்டிற்குள் நுழைகிறார். அவரது பிடியில் சிக்கி தவிக்கும் பாரதியை போலீஸ் உடையில் வரும் சேது காப்பாற்றுவதாக உறுதி அளிக்கிறார். ஆனால், சேதுவை நம்ப வேண்டாம் என்றும், அவரை வீட்டை விட்டு வெளியேற்றுமாறும் பாரதியிடம் கூறுகிறார் கனல் கண்ணன்.சேதுவின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருப்பதையும் பாரதி உணர்கிறார். இதனால் யாரை நம்புவது, யாரை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பதில் ரொம்பவே குழம்பி தவிக்கிறார் பாரதி. இறுதியில் நடப்பது சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ்.

இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு - ஏர்மீடியாகலை
இயக்குனர் - வெங்கல் ரவி
நடனம் - தாரா, பாலகுமாரன் - ரேவதி
இசை - பாலா
ஒளிப்பதிவு - செல்வா.ஆர்
எடிட்டிங் - கே. தணிகாசலம்
பாடல்கள் - யுகபாரதி, கிருதியா, பாலா
வசனம் - சேகர் பாரதி
ஸ்டண்ட் - கனல் கண்ணன்
இயக்குனர் - தக்காளி சீனிவாசன்

No comments: